Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யாகம் செய்வதால் மழை பெய்தால் நல்லதுதான்: தமிழிசை

மே 03, 2019 07:45

தூத்துக்குடி: யாகம் செய்வதில் மக்களுக்கு நம்பிக்கை இருந்து மழை பெய்தால் நல்லதுதானே என பாஜக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்,

இந்து அறநிலையத்துறை மழை வேண்டி யாகம் செய்யுங்கள் என்று சொன்னவுடனே சுபவீ, கி.வீரமணி ஆகியோருக்கு கடும் கோபம் வருகிறது. யாகம் செய்வதில் மக்களுக்கு நம்பிக்கை இருந்து மழை பெய்தால் நல்லதுதானே எனவே யாகத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்பது எனது கருத்து எனக்கூறினார்.

அண்மையில் அறநிலையத்துறை மழை பொழிவதற்காக கோவில்களில் யாகங்கள் நடத்தக்கோரி கோவில்களுக்கு சுற்றறிக்கை கொடுத்திருந்தது குறிப்படத்தக்கது.

 
 

தலைப்புச்செய்திகள்